Thursday, October 3, 2013

நம்புவோம்

வர்ணாஸ்ரமத்தை நிலைநிறுத்திய காந்தியை எதிர்த்த பெரியார் தொண்டர்கள் யாரும் இந்துமதவெறி கோட்சேவை ஆதரிக்கவில்லை, அதுபோலவே தமிழர்விரோத காங்கிரசை எதிர்ப்பவர்களும் ஆர்எஸ்எஸ் வழிநடக்கும் மோடியை ஆதரிக்கவில்லை. ஆனால் ஜெயலலிதா மிக தீவிரமாக விடுதலைப்புலிகளை எதிர்த்தபோது வினைத்தொகை போல அன்றும் இன்றும் என்றும் உடனிருந்து ஆதரித்தது போல, ஜெ அனுமதியளித்து திறந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக இன்றுவரை சட்டப்போராட்டம் நடத்தும் வைகோ அவர்கள், இப்போ ராஜபக்சேவின் நண்பரான சு.சாமியின் கட்சியோடு, தனிஈழம் அங்கே யாரும் கேட்கவில்லை என்று இந்தியர்களுக்கு எடுத்து சொன்ன சுஷ்மா ஸ்வராஜ் அவர்களின் கட்சியில் இருந்துகொண்டே தமிழீழம் அமைவதற்கும், ஆர்எஸ்எஸ் வழி நின்று ராமர் பாலமென்று சேதுவை நிறைவேற்றக்கூடாதென்று பிஜேபி தடுப்பதையும் கவலைக்கொள்ளாது அதனுடன் கூட்டணியமைத்து துணைநின்று சேது சமுத்திரம் தோண்டி கொடுக்கவும் மறுபடி வாஜ்பாயை கூட்டிவருவாரு அண்ணன் வைகோ அவர்கள். நாமும் நம்புவோம். இலைமலர்ந்தால் ஈழம் மலருமென்று வாக்களித்தவர்களல்லவா நாம்