Wednesday, July 10, 2013

மழை


கணுக்கால் வரை நீர் தேங்கியிருந்து
குடையும் இல்லாமல்
சற்றே பெருமழையாக…
சிறிதே இடமிருந்த கட்டிடத்தின் முகப்பில்
அதிகப்பட்ச ஆட்களோடு
நெருக்கியடித்து நின்றதாலோ
என்னவோ…
இருவருக்கும் அன்றிருந்து
மழையின் அதன்பின்னான

தேநீரும் சுவையில்லாமல் போனது

No comments:

Post a Comment