மகனின்
சொற்பேச்சுகேளாண்மை
கண்டிப்பில்
பேசாவன்முறையை
கையிலெடுத்ததால்
பின்னே அவனால்
முடிந்தளவு
கெஞ்சி அழுதும்
இரக்கமில்லாமல்
செவிசாய்க்காத காரணத்தால்
நீர்வற்றி
பொருமிகொண்டே
படுத்துறங்கி போனானோ.
என்ன பாடுபட்டிருக்குமோ
பிள்ளை மனம்
தாமதமாய் சமாதானப்படுத்த
சென்றதால்...
எத்தனை நீரருந்தியும்
கனமாய் உள்ளிறங்கவில்லை.
உறக்கமில்லாமல்
இப்பொழுது
நான்
#மகனதிகாரம்
சொற்பேச்சுகேளாண்மை
கண்டிப்பில்
பேசாவன்முறையை
கையிலெடுத்ததால்
பின்னே அவனால்
முடிந்தளவு
கெஞ்சி அழுதும்
இரக்கமில்லாமல்
செவிசாய்க்காத காரணத்தால்
நீர்வற்றி
பொருமிகொண்டே
படுத்துறங்கி போனானோ.
என்ன பாடுபட்டிருக்குமோ
பிள்ளை மனம்
தாமதமாய் சமாதானப்படுத்த
சென்றதால்...
எத்தனை நீரருந்தியும்
கனமாய் உள்ளிறங்கவில்லை.
உறக்கமில்லாமல்
இப்பொழுது
நான்
#மகனதிகாரம்