Thursday, March 23, 2017

சொற்பேச்சு கேளாண்மை

மகனின்
சொற்பேச்சுகேளாண்மை
கண்டிப்பில்
பேசாவன்முறையை 
கையிலெடுத்ததால்
பின்னே அவனால்
முடிந்தளவு
கெஞ்சி அழுதும்
இரக்கமில்லாமல்
செவிசாய்க்காத காரணத்தால்
நீர்வற்றி
பொருமிகொண்டே
படுத்துறங்கி போனானோ.
என்ன பாடுபட்டிருக்குமோ
பிள்ளை மனம்
தாமதமாய் சமாதானப்படுத்த
சென்றதால்...
எத்தனை நீரருந்தியும்
கனமாய் உள்ளிறங்கவில்லை.
உறக்கமில்லாமல்
இப்பொழுது
நான்
#மகனதிகாரம்

No comments:

Post a Comment