வழக்கம் போல் போகாத ஊருக்கு விரிவாகவே வழி சொல்லியிருக்கிறார் தமிழருவி மணியன் இன்றைய ஜுவியில்..
தமிழகத்தில் மோடியைப் பிரதமராக்க 15 % வாக்காளர்களும் விஜயகாந்த்திடம் 10% வாக்காளர்களும் மக்களின் சகல பிரச்னைகளையும் கையிலெடுத்துக் கடுமையாகப் போராடி வருவதால் வைகோவிடம் 10% வாக்காளர்களும் சேர்ந்தால் மோடியை பிரதமராக்கி விடலாமாம்.
மாற்றுஅணிக்காக மதிமுகவை முன்னிலைப்படுத்தியது போய் இப்போ தேமுதிகவை நோக்கி கெஞ்ச ஆரம்பித்து விட்டார் தமிழருவி மணியன். கலைஞரை ஆட்சிபீடத்தில் இருந்து அகற்ற ஜெயலலிதாவை முன்னிறுத்த வேண்டியிருந்ததாம். ஆனால் ஜெயலலிதா முதல்வரானதால், போயஸ் தோட்டத்தில் போய் முதுகு வளைந்து முகம் காட்டிப் பல்லிளிக்கவில்லையாம், சீட்டு கொடுக்காமல் வைகோவை தேர்தலுக்கு முன்னே விரட்டிவிட்டவர் இவருக்குக்காக காத்திருப்பாரென்று எண்ணம் போல.
கழுதை தேய்ஞ்சி கட்டெரும்பான கதையாக //மதுவிலக்கை நடை முறைப்படுத்த மாநிலம் முழுவதும் கால்கள் கொப்பளிக்க // நடந்த வைகோவுடன் கேப்டனை சேரசொல்வது நகைமுரண் தான். இன்னும் பலரின் முகத்திரை கிழியும் போல நாளடைவில்
தமிழகத்தில் மோடியைப் பிரதமராக்க 15 % வாக்காளர்களும் விஜயகாந்த்திடம் 10% வாக்காளர்களும் மக்களின் சகல பிரச்னைகளையும் கையிலெடுத்துக் கடுமையாகப் போராடி வருவதால் வைகோவிடம் 10% வாக்காளர்களும் சேர்ந்தால் மோடியை பிரதமராக்கி விடலாமாம்.
மாற்றுஅணிக்காக மதிமுகவை முன்னிலைப்படுத்தியது போய் இப்போ தேமுதிகவை நோக்கி கெஞ்ச ஆரம்பித்து விட்டார் தமிழருவி மணியன். கலைஞரை ஆட்சிபீடத்தில் இருந்து அகற்ற ஜெயலலிதாவை முன்னிறுத்த வேண்டியிருந்ததாம். ஆனால் ஜெயலலிதா முதல்வரானதால், போயஸ் தோட்டத்தில் போய் முதுகு வளைந்து முகம் காட்டிப் பல்லிளிக்கவில்லையாம், சீட்டு கொடுக்காமல் வைகோவை தேர்தலுக்கு முன்னே விரட்டிவிட்டவர் இவருக்குக்காக காத்திருப்பாரென்று எண்ணம் போல.
கழுதை தேய்ஞ்சி கட்டெரும்பான கதையாக //மதுவிலக்கை நடை முறைப்படுத்த மாநிலம் முழுவதும் கால்கள் கொப்பளிக்க // நடந்த வைகோவுடன் கேப்டனை சேரசொல்வது நகைமுரண் தான். இன்னும் பலரின் முகத்திரை கிழியும் போல நாளடைவில்
No comments:
Post a Comment