Sunday, November 10, 2013

டாக்காவில தமிழ் வகுப்பு

தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்த தமிழ் எங்கள் உயிருக்கு நேர் 

என்ற புரட்சிக்கவி பாரதிதாசனின் வரிகளை மனதில் நிறுத்தி நமது உயிரான, அமுதான தமிழை அடுத்த தலைமுறைக்கு எழுத படிக்க சொல்லித்தர வங்கதேசத்தில் எடுத்த முயற்சிக்கு இந்தோனிசியா தமிழ்ச்சங்கத்தின் மூலம் தோழர் Vivekanandhan Ramanujamஅவர்கள் அங்கே கற்பிக்கப்படும் தங்களின் பாடத்திட்டத்தினை மகிழ்வுடன் தந்தளித்தார்கள். மேலும் ஹாங்காங் தமிழ்பண்பாட்டுக் கழகத்திலிருந்து தோழர் Ram Hkg அவர்களின் குறைந்த கால அவகாசத்தில் சிங்கப்பூர் பாடதிட்ட நூல்களையும் தந்து உதவினார்கள். இப்பணியில் மகிழ்ச்சியோடு தன்னார்வத்தோடு இன்றிலிருந்து ஈடுபடும் ஆசிரியர்களை வாழ்த்துவோம் வாருங்கள்

No comments:

Post a Comment