Wednesday, June 26, 2013

புகைப்படம்

உரக்க சிரித்து
கைகளை நடுங்க செய்தால்
உன் முகம்
எப்படி முழுமையாய்

பதியும்?

குறும்பு

ஏதேனும் தவறை செய்துவிட்டு
திட்டிவிடுவேனோயென்று பார்க்கிறாய்
குறுகுறுவென உன் பார்வையை ஓரிரு நிமிடம்
பார்த்திருக்கும்போது தைரியம் பெற்று 
சிரித்து கோபத்தை மடைமாற்றிவிடும்
சாமர்த்தியத்தை எங்கு பெற்றாயோ என் மகளே

காதல்

உனக்கான என் ஒற்றைத் துளி நீர்
என்னையும் அறியாமல் 
உணர்த்தி விட்டுப் போனது
உன் மீதான என் காதலை.. 

உறக்கம்

காற்றில்லாத இடம் மட்டுமல்ல
நீயில்லாத அறையும் 
வெற்றிடமே...


உன் கேள்விக்கு மட்டும் விடை இல்லை என்னிடம்...
உறக்கமின்றி தவிக்கிறேன் உன் நினைவால் . . 

விழி வழி மீது......
வாசலில் தவமாய்!

சிட்டுக்குருவி

அறைக்குள் தெரியாமல் 
நுழைந்துவிட்ட 
சிட்டுக்குருவியை 
பிடித்து உணவு, நீர் அளித்தேன், 
அலகால் தொடக்கூடவில்லை. 
விடுதலையாய் வெளியேறவே முனைந்தது 

மழை

மழையில் நனைந்தால் 
குடை ஈரமாகும்
என்று 
மீண்டும் வீட்டுக்குள் 
வேகமாய்...
உன் மேல் வீழாத 
மழைத்துளி வீணென்று 
மேகமும் 
நிறுத்திக்கொண்டது பின்னே

Tuesday, June 25, 2013

மகளதிகாரம்

மகளதிகாரம் துவிட்டுகளின் தொகுப்பு

அ/ஆ சரி, இ/ஈ கூட சரிதான், அப்படியே சொல்லிகிட்டு வந்து ஐ/ஐயி என்று சொல்லும் உனக்காக உயிரெழுத்தை ஒன்று கூட்டலாமே

கோபத்தில் "என் கூட பேசாதே" என்று நீ சொல்லிய பின் நான் மௌனமானால் மீண்டும் மீண்டும் பேசாதே என்கிறாய், என்ன செய்ய நான்

ஏபிசிடி 26 தான்னு யாரு சொன்னது, சின்ன ஏ, பெரிய ஏ என்று மொத்தம் 52 - முடியல எழுதவைக்க

கைபேசிய தண்ணி ஊத்தி கழுவுற சோனி விளம்பரத்தை தடை பண்ணுங்கப்பா, நேற்று எனது ஐபோன் கழுவப்பட்டது 

கல்வெட்டு படிக்க பயிற்சியெல்லாம் தேவையில்லை, மகளின் அரிச்சுவடி எழுதுவதை கண்டு கொண்டாலே போதும் 

ஆங்கில எழுத்தை ஒவ்வொன்றாய் சொல்லி கொண்டே வரும்போது எல் என்பதை ட (ta) என்கிறாள்

அப்பா பலூன் பா, ப்ளீஸ் பா பலூன் வாங்கி கொடுப்பா; அப்ப்பா.... பலூன். டேய்... 

அலட்சியபடுத்தி வேகம் குறைக்காமல் செல்லும் வேகத்தடையில் மகளின் வார்த்தை; அப்பா, பொறுமையா போப்பா பார்த்து போப்பா 

தக்காளி நீலக் கலரில் காய்ப்பதற்கு மரபணு மாற்றமெல்லாம் செய்யவேண்டியதில்லை, ஸ்கெட்ச் அந்த கலரில் மகளிடம் இருந்தால் போதும்

போன் போட்டு கொடு அப்பாகிட்ட பேசனும் என்று அடம்பிடித்து மகள் சொல்கிறாள், "அம்மா திட்டிகிட்டே இருக்காங்கப்பா". நான் கேட்டேன் உன்னையுமா என்று

கண்மணி அப்பாவை இங்க கூப்பிடு.. அப்பா, இங்க வாடா ...மரியாதையா கூப்பிடுமா..அப்பா, இங்க மரியாதையா வாடா..

Monday, June 24, 2013

தாய்மொழிக்கல்வியும் தொழில்கல்வியும்

தமிழில் படித்தால் சட்டி சுரண்டுகிற வேலைக்கு கூட லாயக்காக மாட்டார்கள் - இப்படி "துக்ளக் சோ" சொல்லியிருக்கிறார். 
எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு. தமிழை காட்டுமிராண்டி மொழி என்று சொன்ன பெரியார் உள்ளபடியே தமிழ் சீர்திருத்தத்திற்கு உதவி மொழியை செம்மைப்படுத்தினார். தமிழ் நீசமொழி என்று சொன்னவர்கள் தமிழ் கருவறைக்கு வெளியே தான் வைத்துள்ளார்கள். துக்ளக் தமிழில் தானே வருகிறது, தமிழால் வயிறு வளர்க்கும் சோ தமிழ் மூலம் படிப்பவர்களுக்கு தன் ஏட்டில் ஆக்கப்பூர்வமாக ஏதேனும் வேலைவாய்ப்பிற்கு செய்கிறாரா.? எப்பாடு பட்டேனும் தமிழை அழிக்க துடிக்கும் சிலரோடு சேர்ந்து மற்றவர்கள் குழம்பிக்கொள்வதால் வந்த பிரச்சனை இது.
தாய்மொழிக்கல்வியையும் தொழில்கல்வியையும் குழப்புவதால் வந்த பிரச்சனை இது. தமிழில் கல்வி கற்க வேண்டும் என்பது தாய்மொழியில் கல்வி கற்றால் அறிவு வளர்ச்சிக்கு உதவும் என்பதோடு சிந்தனை ஆற்றல் பெருகும். அனைத்து வகையான தொழில்கல்வியையும் தமிழில் படிக்கவேண்டுமென்பது தமிழ் வளர்ச்சியோடு அந்த மொழி படிக்கும் மாணவர்களின் அறிவு திறனுக்கே. தமிழில் படிப்பதால் வேலை தரவேண்டும் என்பது வாதமல்ல. இதற்கு முதல் படி அனைத்து தொழில்நுட்பப் பயிலக புத்தகங்களையும் தமிழ் படுத்த வேண்டும்




கணிணி உள்ளீடுகளில் அதிக எழுத்துரு கொண்டதால் நாம் எவ்வளவு இன்னல்களை எதிர்நோக்குகிறோம். இன்னும் கொஞ்ச நாள் பெரியார் இருந்திருந்தால் வரிசை உயிர்மெய் எழுத்தையும் (க்+=கு,ங்+=ஙு,ச்+=சு) வரிசை உயிர்மெய்எழுத்தையும் (க்+=கூ,ங்+=ஙூ,ச்+=சூ) காலத்திற்கேற்ப மாற்றம் செய்திருப்பார். அவரின் பணியை தொடராததால் வந்தவை இது. மாற்றியிருந்தால் இன்னும் எளிதாக கணணியில் உபயோகப்படுத்த பட்டிருக்கும். அதற்காக தமிழின் புனிதம் கெட்டுவிடும் என்று எண்ணத்தேவையில்லை. தோன்றிய காலம் தொட்டு தமிழ் மாற்றம் பெற்றே வந்திருக்கிறது. வளர்ச்சிக்கு மாற்றம் தேவையே

ரிஷிகேஷ்

ஆலகால விஷத்தையே கழுத்துக்கு கீழே போகவிடாமல் அன்றே பார்வதி மென்னிய புடிச்சதால தான் இன்னைக்கு தண்ணி கழுத்துக்கு மேல போகல #ஓம்நமசிவாய





கேதார்நாத் வெள்ளத்தில் சிக்கிய மக்களிடம் கொள்ளையடிப்பது சாமியார்கள் தான் என்று செய்தி வருகிறது. மார்கட்டிங் தெரிஞ்ச பொறுக்கிங்க ஆசிரமம் அமைக்குது, தெரியாத பொறுக்கிங்க அங்கங்கே காத்திருக்கிறது காரணத்திற்காக #சாது